சென்னை: கம்ப்யூட்டர் கோடிங் உருவாக்குவதற்கு விளையாட்டு முறையில் பயிற்சி அளிக்கப்படுவதாக சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
இது குறித்து குவி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பாலமுருகன் கூறுகையில், “இளம் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கோடிங் எழுதுவதற்கான பயிற்சி அளிப்பதற்கு இந்த விளையாட்டை தொடக்கி உள்ளோம். விளையாட்டு மூலம் மாணவர்கள் ஆர்வமாக தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். இந்த முறையானது பெற்றோரின் செல்போன் மூலம் உருவாக்கப்படுவதால் மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். மாணவர்கள் விளையாட்டு முறையிலேயே கம்ப்யூட்டர் கோடிங் எழுதி தங்களின் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள முடியும்.
ஒன்பது முதல் 14 வயது வரையில் உள்ள மாணவர்கள் http://www.hackerkid.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்கள் அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளலாம்” என கூறினார்.